2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். புற்றுநோய் வைத்தியசாலைக்கான நடைபவனி வல்லையை வந்தடைந்தது

Suganthini Ratnam   / 2011 ஜூலை 26 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், ஞானசெந்தூரன்)

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்காக மாத்தறை தெய்வேந்திர முனையிலிருந்து நடைபவனியாக புறப்பட்ட குழுவினர் நேற்று திங்கட்கிழமை பகல் யாழ்ப்பாணம் வல்லைவெளியை அடைந்துள்ளார்கள்.

பருத்தித்துறை வெளிச்சவீடு வரையான பயணத்தை மேற்கொண்டு 200 மில்லியன் ரூபாவை திரட்டுவது இந்த நடைபவனி பயணத்தின் நோக்கமாகும். இதுவரையில் இவர்கள் தமது இலக்கில் சுமார் 130 மில்லியன் ரூபா வரை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இக்குழாமில் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார்சங்கக்காராவும் இணைந்து கொண்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.  வழிநெடுகிலும் பொதுமக்கள் நின்று தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் நடைபவனிக் குழுவினருக்கு மலர் மாலைகள் அணிவித்தும் கௌரவித்தும் உள்ளனர்.

நாளை புதன்கிழமை நடைபவனிக் குழுவினருக்கு  யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்கள். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர் அணியின் தலைவருமான நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளார்.

பிற்பகல் 4.00 மணிக்கு தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில்  இடம்பெறும் புற்றுநோயாளர்களுக்கான விடுதி அமைப்பதற்கான அத்திவாரம் இடும் நிகழ்விலும்  நடை பாதை அணியினர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X