2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளி அபிவிருத்தி பணி தொடரும்: சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். அதற்கமைய கல்விக்கு அத்திவாரமிடும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்யும் பணியை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

உதயநகர் மேற்கு, உதயன் முன்பள்ளியை திறந்துவைத்து உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

"எமது சமூகத்தை கல்வி ரீதியாக மேம்பாடடையச் செய்வதற்கு நாம் அனைத்து நடவடிக்ககைளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம். அறிவுரீதியாக மேம்பட்ட சமூகத்தினை உருவாக்குவதன் மூலம் சமூமட்டத்தில் காணப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எனவே இதற்காக நாம் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு மக்களின் பூரண ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

அத்தோடு இம்மாவட்டத்தின் முன்பள்ளிகளை மேம்படுத்துவதில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.  அதற்கமைவாகவே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வேதனத்தையும் மேலும் பல உதவித்திட்டங்களையும் வழங்கியுள்ளோம்.

மேலும் முன்பள்ளிகளுக்கான சகல வளப் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்வதிலும் அதிக கவனம் செலுத்திவருகின்றோம். அதன் ஒருகட்டமாகவே இன்று திறந்துவைக்கப்பட்ட இந்த உதயன் முன்பள்ளிக் கட்டிடமும் அமைகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

உதயநகர் மேற்கில் மிக நீண்டகாலமாக நிரந்தர கட்டிடமின்றி இயங்கி வந்த இம்முன்பள்ளிக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஏழு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான கட்டிடத்தினை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

அதனை நேற்று திங்கட்கிழமை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் திறந்து வைத்தார். இக்கட்டிடத்தை அமைப்பதற்கு கொடையாளிகளான தனு றெஸ்ட்றோரண்ட் மற்றும் ஓப்பந்தகாரர் ரஞ்சன் தங்களுடைய உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .