2025 ஜூன் 28, சனிக்கிழமை

நல்லூரில் இராணுவத்தினர் அன்னதானம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர்க் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்றுப் புதன்கிழமை  இராணுவத்தினர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

இராணுவத்தினரின் 523ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் கீழ் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் 523ஆவது படைப்பிரிவின் தளபதி ஜானக வெல்கம அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான உணவுப்பொதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நல்லூர் உற்சவக்காலங்களின்போது வருடம் தோறும் இராணுவத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .