Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மண்டைதீவு பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மண்டைதீவைச் சேர்ந்த யாக்கோப்பு நிக்ஸன் (வயது 21) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். இதேவேளை, மண்டைதீவைச் சேர்ந்த அன்ரனி லியூட் (வயது 48) ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மண்டைதீவு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மீனவர்கள் இருவர் கடற்றொழிலுக்குச் சென்றதாகவும் அவர்கள் சென்ற படகு காற்றில் அகப்பட்டு வலையில் சிக்குண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும் கரை திரும்பாதைக் கண்டு இன்று திங்கட்கிழமை காலை ஏனைய மீனவர்கள் தேடிச்சென்றபோது ஒருவர் உயிரிழந்துள்ள நிலையிலும் மற்றையவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
3 hours ago