2025 ஜூன் 28, சனிக்கிழமை

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அனலைதீவு கடற்கரைப் பகுதியில் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை கரையொதுங்கிய  நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை அடையளம் காண்பதற்கு உதவுமாறு ஊர்காவற்துறை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சடலத்தின் தலைப்பகுதி சேதமடைந்து இருப்பதாகவும் நீலநிறமான ரீசேட் அணிந்திருந்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாகவும் சடலத்துக்குரியவர் சுமார் 30 வயதிற்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்படி சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .