Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்,கவிசுகி)
யாழ். குடாநாட்டில் மூன்று சிறுமிகள் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். நல்லூர்க் கந்தசாமி கோவிலின் வருடாந்தத் திருவிழாவின் இறுதி நாளான பூங்காவனத் திருவிழாவுக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமி நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர்.
புதிய செம்மணி வீதி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வேலன் வேணிகா (வயது 6) என்ற சிறுமியே நல்லூர்க் கோவிலில் காணாமல்போயுள்ளார்.
பெற்றோரும் பொலிஸாரும் இணைந்து கோயில் வளாகத்தில் நேற்றிரவு வரை குறித்த சிறுமியை தேடியபோதிலும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்த யாழ். பொலிஸார், இச்சிறுமியை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை மானிப்பாய், வடமராட்சிப் பகுதிகளை சேர்ந்த இரு சிறுமிகள் நேற்றுக்காலை முதல் காணாமல்போயுள்ளதாக மானிப்பாய் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
மானிப்பாயைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ரோஷினி (வயது 17) என்பவரும் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8இல் கல்வி கற்கும் கனகலிங்கம் லக்ஷிகா என்ற சிறுமியும் காணாமல்போயுள்ளதாக மானிப்பாய் மற்றும் நெல்லியடி பொலிஸார் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago