Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
தற்போது இந்தியாவில் தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் மூவரையும் மனிதாபிமான அடிப்படையில் தூக்குத் தண்டனையில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என வலி வடக்குப் பிரதேச சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி வடக்குப் பிரதேச சபையின் முதலாவது சபைக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை சபையின் கேட்போர் கூடத்தில் சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
அப்போது, இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தூக்குத் தண்டனைக்காக தமது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாது தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரும் தீமானத்தை சபை உறுப்பினர் ஒருவர் கொண்டுவந்தார். சபை அங்கத்தவர்கள் அனைவரும் அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டத் தீர்மானத்தை அனுப்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற படையினரின் தாக்குதல்களை கண்டித்தும் வலி தெற்கு பிரதேச சபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
55 minute ago
3 hours ago