Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். உடுப்பிட்டி பகுதியில் காணாமல்போனதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி தேடுதலின் பின்னர் யாழ். பஸ் நிலையத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் யாழ். பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
உடுப்பிட்டி இமையாள் பகுதியைச் சேர்ந்த கனகலிங்கம் லக்ஷிகா (வயது 13) என்ற சிறுமியே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காணாமல்போன நிலையில் மீட்கப்பட்டவர் ஆவார்.
கடைக்குச் சென்ற இச்சிறுமி வீடு திரும்பாதைக் கண்டு அவரது உறவினர்கள் யாழ். நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இச்சிறுமி யாழ். பஸ் நிலையத்தில் தனிமையில் இருந்ததாகவும் இவரை பெண்ணொருவர் அழைத்துச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் இருத்தி வைத்திருந்ததாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது இவர் வன்னி யுத்தத்தில் பெற்றோரை இழந்தவரென்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
3 hours ago