2025 ஜூன் 28, சனிக்கிழமை

நல்லூர்த் திருவிழாவில் காணாமல்போன சிறுமி குறித்து தகவல் வழங்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர்த் திருவிழாவின்போது காணாமல்போனதாகத் தெரிவிக்கப்படும் 6 வயது சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு யாழ். பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இருபாலையைச் சேர்ந்த வேலன் வேணிகா (வயது 6) என்ற சிறுமி நல்லூர்க் கந்தசாமி கோவில் திருவிழாவுக்கு சென்றபோது நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று அடி உயரமுடைய இச்சிறுமி வட்டமுகமுடையவரெனவும் தலைமுடியை கட்டையாக வெட்டியிருப்பவரெனவும் மாநிறமுடையவரெனவும் மெல்லிய கைகளையுடையவரெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேரடியாகச் சென்று தெரியப்படுத்த முடியும் அல்லது 0718137770, 0712790185 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்தமுடியுமென யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .