Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். குப்பிளான் பகுதியில் அரசசார்பற்ற நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படவிருந்த வீட்டுத்திட்ட நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வலி. தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தில நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே வீட்டுத்திட்ட நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குப்பிளான் வடக்கு ஜெ - 211 கிராம அலுவலர் பிரிவில் ஐந்து வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக ஜசாக் நிறுவனம் பயனாளிகளை தெரிவு செய்து வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தன. இந்த நிலையில், வீடு கட்டுவதற்கான பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தபோது, அரசாங்க அலுவலர்களின் தெரிவின்றி பயனாளிகள் தெரிவு இடம்பெறக்கூடாதெனக் கூறி இடைநிறுத்தப்பட்டது.
வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான உரிய பயனாளிகள் பற்றிய விபரத்தை பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர்களிடம் காட்டி உரிய முறையில் அனுமதி பெற்று பின்னர் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago