2025 ஜூன் 28, சனிக்கிழமை

நாவாந்துறை மோதல்ச் சம்பவ வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நாவாந்துறையில் மர்ம மனிதர்கள் விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாவாந்துறை சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே யாழ். மாவட்ட நீதிபதி ஆ.பிரேம்சங்கர் இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்

மக்களிடம் விசாரணை செய்வதற்கு மேலும்  காலஅவகாசம் தேவைப்படுவதாகவும்  மேலும் கால அவகாசம் தரும்படியும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்தே இவ்வழக்கு விசாரணை  டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .