Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலி தெற்கு பிரதேச சபையின் சுகாதரா தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட தொழிலாளர்கள் பிரதேச சபையின் செயலாளரை மாற்ற கோரியும் தமது பதவிகளை நிரந்தரமாக்க கோரியும் தமது இருப்பிடங்களுக்க மின்சாரம் வழங்க கோரியும் பதாதைகளுடன் சுமார் 15 பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதேவேளை சபையின் உறுப்பினர்கள் இன்று கூடி குறிப்பி;ட்ட விடயம் சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.
சபையின் செற்பாட்டிற்க்கும் பொதுமக்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சபை அங்கீகரிக்காது எனவும் தலைவர் சபையின் நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவுக்கும் ஏகோபித்த ஆதரவை வழங்குவதாகவும் முடிவெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் சுகாதார வார அறிவிப்பையொட்டி சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்க்காக வலி வடக்கு சபையில் இருந்து ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு சுகாதார வார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சுன்னாகம் பொலிஸார் ஊழியர்களின் போராட்டம் நடைபெறற இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
27 Jun 2025