2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். அரச அதிபருக்கு எதிராக பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களைப் பற்றி பாலியல் அவதூறான கருத்துக்களை  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகின்றதாக குற்றஞ்சாட்டி இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான ஆசிரிய மாணவர்களும் நிர்வாகத்தினரும் ஈடுபட்டனர்.

யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களைப்  பற்றி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் பாலியல் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும்   உண்மைக்குப் புறம்பான வகையில் அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் மீதான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து யாழ். அரசாங்க அதிபர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலாதாரமற்றவையெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Amirtha Wednesday, 12 October 2011 05:39 PM

    இந்தியாவில் ஒரு அரசியல்வாதி (சுப்பிரமணியம் சுவாமி) எப்போதும் தான் பிரபலம் அடைவதற்காக விசித்திரமான கருத்துக்களை வெளியிடுவார்.

    Reply : 0       0

    Sharmi Wednesday, 12 October 2011 05:40 PM

    இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    Reply : 0       0

    neethan Wednesday, 12 October 2011 07:41 PM

    நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் என்றால்? பெண் அரச அதிபர் பெண்களை மலினப்படுத்துவாரா? நெருப்பு இன்றி புகை வருமா? கண்ணகிகள் சிலம்பை உடைப்பார்களோ? வார்த்தை பிரயோகம் கனதியானால் மன்னிக்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X