2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பெண்களுடன் சேட்டை செய்த இளைஞர் மூவர் கைது

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வீதியால் செல்லும் பெண்களுடன் சேட்டை செய்ததாகத் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் சிலர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏழாலை மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக நின்றுகொண்டு இவ் இளைஞர் கும்பல் நாளாந்தம் அவ்வழியால்  பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுடன்  சேட்டை செய்துவந்தனர்.

இந்த நிலையில், இந்த இளைஞர் கும்பலிடையே ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து  கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, மூன்று இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Monday, 12 December 2011 10:25 PM

    பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிசாருக்கு அதிகரிக்கும் போது, சேட்டை செய்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு அதிகம்.

    Reply : 0       0

    zain naseem Monday, 12 December 2011 11:23 PM

    வாழ்க ஜனநாயகம்

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Tuesday, 13 December 2011 12:09 AM

    சேட்டை சரி செய்தாலும் கைது செய்யப்படுவார்களா ?

    Reply : 0       0

    Ramya Tuesday, 13 December 2011 12:43 AM

    சேட்டை செய்தவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் பத்திரிகைகேளில் பிரசுரித்தால் இது போன்ற குற்றங்களை குறைக்கலாம்.

    Reply : 0       0

    இளங்கோ Tuesday, 13 December 2011 09:45 AM

    ஜனநாயகம் வாழும். ஆனால் ஜனநாயகத்தால் தமிழர்கள் வாழுவார்கள் என்று சொல்ல முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .