Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 02 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலுள்ள சுதேச மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஆங்கில மருந்து விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பிராந்திய சுகாதார அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பேரில் திடீர் சோதனைக் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே ஆங்கில மருந்து விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் முடமாவடி, கல்வியன்காடு, அச்சுவேலி, கதிரிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள மருந்தகங்கள் மீது ஏற்கெனவே மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஆங்கில மருந்துகள் விற்பனை செய்தமை கண்டுபிடிப்பட்டு எச்சரிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தகங்களில் சில மீண்டும் ஆங்கில மருந்து விற்பனையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மருந்தக உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் யாழ். பிராந்திய சுகாதார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
47 minute ago