2025 ஜூன் 25, புதன்கிழமை

கச்சதீவு உற்சவத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையினால் அறிவித்தல

Super User   / 2012 மார்ச் 02 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டில் இருந்து மார்ச் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு உற்சவத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்கு யாழ்.பிராந்திய சுகாதார சேiவைகள் பணிமணை அறிவுறுத்தலொன்று விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்தியாவில் மலேரியா நோய் பரவலாக காணப்படுவதால் உற்சவத்துக்கு வரும் இந்தியர்களினால் இலங்கையர்களுக்கு மலேரிய நோய் தொற்ற வாய்ப்புள்ளது.

குறித்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய பின் எவருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று மலேரியா நோய்க்கான இரத்த ரிசோதனையை செய்து கொள்ளவும்.

யாழில் மலேரியாவின் தாக்கம் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை உடனடியாக பின்பற்றுமாறும்" யாழ்.பிராந்திய சுகாதார நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .