2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிறந்து ஒருநாளேயான சிசு யாழில் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மே 21 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                              (கவிசுகி)

யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று  கைவிடப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து, இச்சிசு மீட்கப்பட்டதாகவும் அக்காணியின் புற்தரையில் இச்சிசு இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட இச்சிசு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சிசுவை விட்டுச் சென்ற தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .