2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட மின்சார சபை ஊழியர்களினால் அரை நாள் வேலை நிறுத்த போராட்டம்

Super User   / 2012 மே 21 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற் சங்கங்களின் முண்ணனியின் எற்பாட்டில் யாழ் மாவட்ட மின்சார சபை ஊழியர்களினால் இன்று திங்கட்கிழமை  அரை நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

ஊழியர்கள் தொடர்பான சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு, ஊழியர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொடு, நியாயமானதொரு சம்பள உயர்வினை அனைவருக்கும் வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொது முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் இலங்னை மின்சார சபையின் இணைந்த தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு எதிர்வரும் மே 29ஆம் திகதி இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் நடைபெறவுள்ள கண்டன வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .