2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திக்கு பாடுபடவேண்டியது அவசியமாகும்: தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி

Suganthini Ratnam   / 2012 மே 22 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

கடந்த காலத்தில் காணப்பட்ட துர்ப்பாக்கிய நிலைமைகள் நீங்கி தற்போது நல்லதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்க வேண்டியது அவசியமாகும் என  தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார்.

மல்லாகம் தெற்;கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள கல்லாரைக் கிராமத்தில் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பயன்பாட்டிற்காக தெல்லிப்பளை பொலிஸாரினால் அமைக்கப்பட்ட குழாய்நீர் விநியோக ஆரம்ப வைபவம் நேற்றுமுன்தினம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன்  வந்துள்ளேன். இதற்;கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்க வேண்டும். இலங்கை மக்கள் என்ற வகையிலும்; நாம் அனைவரும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையிலும்; ஒன்றுபட்டு உழைக்க  வேண்டும.;
கிராமங்களை முதலில் அபிவிருத்தி செய்து இரண்டாம் கட்டமாக நகரங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த வகையில் தான் தெல்லிப்பளை பொலிஸார் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை அடையாளம் கண்டு தீர்த்துவைத்துள்ளனர்' என்றார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .