2025 மே 19, திங்கட்கிழமை

மதுபாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ்.குடநாட்டில் மதுபாவனை அதிகரிப்பை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை யாழ்.குருநகர் தொடர்மாடி சனசமூக நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

வைத்திய அதிகாரி ஏ.இ.ஞானசோதி தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில், பொது சுகாதார பரிசோதகர் எ.ராஜா கருத்துரைகளை வழங்கினார். மது போதை பாவிப்பதற்கு முன்னர் ஏற்படும் தாக்கம் பற்றியும் அதன் பின்னர் ஏற்படும் தாக்கம் பற்றியும் இதன்போது காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம அலுவலர், பிரதம பொது சுகாதார பரிசோதகர், சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X