2025 மே 19, திங்கட்கிழமை

மர்ம வெடிபொருள் வெடித்ததில் சிறுவன் படுகாயம்

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (ஜெ.டானியல்)
மர்ம வெடிபொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அரியாலை கிழக்கு பகுதியைச் சேந்த எஸ்.வசந்தகுமார் (14 வயது) என்ற  சிறுவனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த வேளை பற்றை ஒன்றிற்குள் இருந்து இம் மர்ம வெடிபொருள் வெடித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X