2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். மாவட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பில் வீடமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது யாழ். மாவட்டத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான வீட்டுத் திட்ட கடனுதவியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயசந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டிற்கு 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், யாழ். மாவட்;;டத்தில் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால் மேலதிகமாக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அரச உத்தியோகஸ்தர்கள் புதிய வீடு அமைத்தலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கடனுதவி வழங்கப்படவுள்ளதாகவும் புதிய வீடு அமைத்தலுக்கு 5 இலட்சம் ரூபா வீட்டுக் கடனுதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் மேலதிக விபரங்களுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயசந்திரன் 0770590842 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .