2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்திய அரசினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் நெடுந்தீவு பிரதேச மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு

Super User   / 2012 ஜூலை 26 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இந்திய அரசினால் வட பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் நெடுந்தீவு பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெயர்ந்து வசிக்கும் மக்களுக்கான இந்திய அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 104 துவிச்சக்கர வண்டிகள நேறறு கையளிக்கப்பட்டன.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட  10 பயனாளிகளுக்கு முருங்கை மர கன்றுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இதற்கு மேலதிகதாக வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு நெடுந்தீவு கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மானிய அடிப்படையில் கோழி குஞ்சுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வாள் பிள்ளை சிறி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸதிரி அலென்ரின், இந்திய துணை தூதரக அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .