2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மனவளர்ச்சி குன்றிய பெண் மீது வல்லுறவு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், ரஜனி)

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 17 வயது பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்

மனவளர்ச்சி குன்றிய இப்பெண் 5 மாதங்களாக உறவினரொருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளாரெனவும் உறவினரே இவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இப்பெண் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .