2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் மின்விநியோகம் தடை

Kogilavani   / 2012 ஜூலை 27 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (ஜெ.டானியல்)
கட்டமைப்பு மற்றும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை மத்திய மின்னிலைய வலையமைப்புடன் இணைப்பதற்காக யாழில் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 28.07.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப் பகுதி நீங்கலாக யாழ்.மாநகரசபைப் பகுதி, ஸ்ரான்லி வீதி ஆகிய இடங்கள் தவிர்ந்த யாழ்.குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் மற்றும் இயக்கச்சி, பளை, மாசார், புதுக்காடு ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

மேலும் 29.07.2012 ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், யாழ்.நகரம் முழுவதும் மற்றும் இயக்கச்சி, பளை, மாசார், புதுக்காடு, மருதங்கேணி, உசன், மிருசுவில், மந்துவில், மீசாலை, வடக்கு மிருசுவில், நாவற்காடு ஆகிய இடங்களிலும்,

01.08.2012 புதன்கிழமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இடங்களுக்கு மேலதிகமாக காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் இயக்கச்சி, பளை, மாசார், புதுக்காடு, மருதங்கேணி, உசன், மிருசுவில், மந்துவில், மீசாலை, வடக்கு மிருசுவில், நாவற்காடு ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .