2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நல்லூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரிக்

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல். எஸ்.கே.பிரசாத்)

யாழ். நல்லூர் உற்சவ காலத்தில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்க உடமைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்குமாறு யாழ். பொலிஸார் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் கோரி வருகின்றனர்.

யாழ். நல்லூர் பகுதிக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் திருடர்கள் இருப்பதினால் தங்கள் உடமைகள் மட்டில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களை விழிப்படையச் செய்வதற்காக நல்லூர் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் ஒட்டியும் வருகின்றனர்.

நல்லூர் உற்சவ காலத்தில் திருட்டுச் சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாதாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா
அதிபர் எரிக் பேரேரா தெரிவித்தார்.

'கொடியேற்றத் திருவிழாவின் போது ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் 4 தங்கச் சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட 7 பேர் பளைக்கும் புதுக்கட்டுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து கைது
செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பெண்களும் 3 ஆண்களும் அடங்குகின்றனர்.

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காக நாட்டில் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான மக்கள் வருகை தரவுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையையைக் காட்டத் தொடங்குவார்.

இதற்காக பல பேர் நல்லூர் சூழலில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குவதகாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொலிஸாரால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஆலயச் சூழலில் 100 இற்கும் மேற்பட்ட பொலிஸார் நாள் தோறும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் 2ஆம் திகதியில் இருந்து 850 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் பங்களிப்பு அவசியமானது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .