2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் காந்தி சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 30 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (ஜெ.டானியல், ரஜனி)

யாழ். அரியாலைப் பகுதியிலுள்ள மகாத்மாகாந்தி சனசமூக நிலையத்திற்கு முன்பாகவுள்ள மகாத்மாகாந்தி சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கைதான இரு சந்தேக நபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

இச்சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே யாழ். நீதிமன்ற நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இக்காந்தி சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். பொலிஸார் கைதுசெய்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .