2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பக்தர்களின் தங்க ஆபரணங்களை திருட முயற்சித்த இருவர் கைது

Super User   / 2012 ஜூலை 30 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். நல்லூர் பகுதியில் பக்தர்களுக்கு மயங்க மருந்து தெளித்து தங்க ஆபரணங்களை திருட முயற்சித்த இருவர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்

தங்க ஆபரண திருட்டில் ஈடுபட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களிடம் யாழ். பொலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் நாளை செவ்வாய்க்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

பக்தர்களின் தங்க ஆபரணங்களை திருடும் நோக்கில் செயற்பட்ட இவர்கள் இருவரும்;,  மயக்க மருந்தை தெளித்து பக்தர்கள் ஆலய சூழலில் மயக்கமுற செய்து தங்க ஆபரணங்களை திருட முற்பட்ட போதே கைது செய்யப்பட்டனர் என யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .