2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள தற்காலிக வாகன பாதுகாப்பு நிலையங்கள் குறித்து கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்,ஜெ.டானியல்)

நல்லூர் உற்சவ காலத்தில் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகமான பணத்தினை அறவிட்டுவருவது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பற்றி பாதுகாப்பு நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

உற்சவ காலத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் 16 வானகப் பாதுகாப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் இரு பாதுகாப்பு நிலையங்கள் மாத்திரதே முறையான அனுமதியைப் பெற்று இயங்கி வருகின்றது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 20 ரூபாவும், துவிச்சக்கர வண்டிக்கு 10 ரூபாவும் அறவிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கான கட்டணமாக 10 ரூபாவும், துவிச்சக்கரவண்டி ஒன்றுக்கு 5 ரூபாவும் அறவிடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

மாநகர சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அந்த கட்டண நடைமுறைக்கு மீறிச் செயற்படும் பாதுகாப்பு நிலையங்களின் உரிமம் ரத்துச் செய்யப்படும் என்றும் இதன்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .