2025 ஜூன் 21, சனிக்கிழமை

பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உரும்பிராய் பகுதியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய திடீர் சோதனையின் போதே பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் பாவனைக்குதவாத காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் முதற்தடவையாக இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .