2025 ஜூன் 21, சனிக்கிழமை

வலி - கிழக்கு பிரதேச சபைக்கு புதிய செயலாளரை நியமிக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளரை மாற்றி புதிய செயலாளரை நியமிக்குமாறு பிரதேச சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களினால் பிரதேச சபையில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்தில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களினால் ஒப்பமிடப்பட்ட அறிக்கை பிரதேச சபை தவிசாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தற்போது இருக்கின்ற செயலாளர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் தம்முடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய தகுதிவாய்ந்த செயலாளர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தியே இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி உறுப்பினாகளால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளூரட்சி மன்றங்களின் உதவி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.உதயகுமார் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .