2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் திருட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன: பொலிஸ்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)

யாழ் மாவட்டத்தில் வீடு உடைத்துகொள்ளையடித்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களை குறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கை காரணமாகவே இவை குறைவவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இவ்வாரம் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 80 முறைப்பாடுகள் பதிவு செய்யப்ப்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குடிபோதையில் வாகனங்கள் செலுத்துவோர் மீது விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு வாரகாலத்தில் குடிபோதையில் வாகனங்கள் செலுத்திய 38 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுமக்கள் ஏனைய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை செய்வது போன்று அண்மையில் யாழ். குருநகர்ப் பகுதியில் திறக்கப்பட்ட பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகளை செய்வதற்கான  அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .