2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். பண்ணை பஸ் நிலையத்தில் முதியவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். பண்ணை பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று யாழ். பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது. புத்தளம், உடப்பு, பூனாபிட்டியவைச் சேர்ந்த தோமஸ் பிரான்சிஸ் அலோசியஸ் மிரண்டா (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்முதியவர் வியாபார நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்துநின்ற வேளை மது அருந்தி விட்டு யாழ். பண்ணை பஸ் நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

வயோதிபரின் சடலம் யாழ். பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .