2025 ஜூன் 21, சனிக்கிழமை

கிழக்கில் தேசிய அரசு அமைக்க த.தே.கூ. உடன்பட்டால் தமிழ் மக்களின் தியாகங்கள் அர்த்தமற்றதாகிவிடும்: அ.இ

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைப்பதற்கான அரசின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடன்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் தியாகங்களுக்கு அர்த்தமற்றுப்போய்விடும் என்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.இராஜகுமாரன் இன்று திங்கட்கிழமை தமிழ்மிரருக்கு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைப்பது தொடர்பில் அரசின் அழைப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக தமிழ் தேசியத்திற்கான தமிழ் இனம் போராடி வந்துள்ளது. இதற்காக பல தியாகங்கள் பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசு அமைப்பதற்கு உடன்படுமாக இருந்தால் இந்த தியாகங்களுக்கும் உயிரிழப்புக்களுக்கும் அர்த்தமற்றுப்போய்விடும் என்றார்.

அத்துடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 1 இலட்சத்து 90 ஆயிரம் பேர் தமிழ் தேசியத்திற்காக வாக்களித்துள்ளனரே தவிர தேசிய அரசு அமைப்பதற்கு அல்ல. இவ்வாறு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காது தேசிய அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்தால் இனிவரும் காலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேச முடியாத நிலை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .