2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். தீவகப் பகுதி வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்க அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜினி)


யாழ். தீவகப் பகுதியில் காணப்படும் வைத்தியசாலைகளில் வைத்தியர்களை நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார்.

தீவக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தீவக பகுதியில் நிலவும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டன.

இதன் போது, ஊர்காவற்துறை மற்றும் வேலணை, மண்டதீவு போன்ற பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்மார்கள், சிற்றூழியர்கள் உட்பட மருத்துவ ஆய்வு கூடங்கள் இல்லாமை போன்ற குறைபாடுகள் பிரதேச செயலாளர்களினால் எடுத்துரைக்கப்பட்டன.

விஷேடமாக தீவக வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனைக் கூடங்களை நிறுவித்தருமாறும், சட்ட வைத்திய அதிகாரி ஒருவரை நிரந்தரமாக நியமிக்குமாறு, கேட்டுக் கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக தீவகப் பகுதி மக்கள் 15,000 முதல் 20,000 ரூபா பணம் செலவிடுவதாகவும், தெரிவிக்கப்பட்டது.

அவற்றிற்கான தீர்வுகள் வடமாகாண சுகாதார பணிப்பாளரினால் எதிர்வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடு;ப்பதாகவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் சுகாதார பணிப்பாளர் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலட்சுமி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுநடதரம் அருமைநாயகம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமனற் உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட யாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் உட்பட தீவக பிரதேச செயலளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .