2025 ஜூன் 21, சனிக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுவில் சமூக விரோதிகள் வேண்டாம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)
   
சிவில் பாதுகாப்பு குழுவில் சமூக விரோதிகளை உள்வாங்க வேண்டாம் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்று முடிந்த இந்த காலப்பகுதியில் சில சக்திகள் மக்களிடையே குழப்பநிலையை உருவாக்க திட்டம் போடுகின்றன. பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இருக்கும் உறவுகளை குழப்ப சில விரோதிகள் சிவில் பாதுகாப்பு குழுவில் இணைந்து செயற்பட நினைப்பார்கள்.

அவ்வாறானவர்களை இணைப்பதற்கு சிவில் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் இடம்கொடுக்கக்கூடாது. சில நேரங்களில் தாங்கள் செய்யும் செயற்திட்டங்களை குழுவில் இருந்து சாதிக்க நினைப்பார்கள். இந்த குழுவினை பயன்படுத்தி மக்களின் செயற்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பார்கள். இவ்விடயத்தில் மக்களும், பொலிஸாரும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சிவில் பாதுகாப்பு குழு கூட்டமும் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். அபிவிருத்தி மற்றும் மொழி அமுலாக்கம் சமநிலையில் இருந்து வருகின்ற நிலையில் சிவில் அமைப்புக்கள் சமூக அக்கறையுடன் முன்னோக்கி செயற்பட வேண்டும்.

எமது நாடு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க பிரதேசங்களில் நடைபெறும் குற்றச்செயல்களை இணங்கண்டு அவற்றை தகுந்த முறையில் தீர்க்க நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .