2025 ஜூன் 21, சனிக்கிழமை

புதிய அமெரிக்க தூதுவர் - ஐ.ஓ.எம் அதிகாரிகள் சந்திப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)
                         
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்கா தூதுவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.ஓ.எம் நிறுவன அதிகாரிகளை இன்று செவ்வாய்கிழழை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். கோவில் வீதியில் உள்ள ஐ.ஓ.எம் தொண்டு நிறுவன அலுவலகத்திலேயே இச்சந்திப்பு நடைபெற்றது.ஐ.ஓ.எம் நிறுவனவத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளிற்கான கடன் உதவிகள் மற்றும்  வாழ்தார உதவிகள் தொடர்பாக அமெரிக்கா தூதுவர் கேட்டறிந்துள்ளார்.

ஐ.ஓ.எம் நிறுவனத்தால் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாழ்வாதார உதவிகள் அமெரிக்காவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் தொழில் உபகரணங்கள் அமெரிக்காவின் புதிய தூதுவரினால் கையளிக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .