2025 ஜூன் 21, சனிக்கிழமை

சுயதொழில் ஊக்குவிப்பு காசோலை வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)

இளைஞர் வர்த்தக வேலைத்திட்டத்தின் கீழ் சுயதொழில் முயற்சி ஊக்குவிப்பு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.பூர்ணசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகிழ்வில், ஸ்டான்டர்ட்  சார்டெட் வங்கியினால் தொழிற்துறை மன்றத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபா நிதியில் 8 பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு
நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

ஸ்டான்டர்ட்  சார்டெட் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி அனில் வார்ட் பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.

2 பயனாளிகளுக்கு 1 லட்சம் ரூபா வீதமும், 6 பயனாளிகளுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்பட்டன. பயனாளிகள் 9 சத வீது வட்டியில் கடன் தொகையினை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 வருடகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளைஞர் யுவதிகளுக்கான வர்த்தக வேலைத்திட்டத்தில் சுமார் 50 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 20 சுயதொழில் ஊக்குவிப்பு காசோலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .