2025 ஜூன் 21, சனிக்கிழமை

எமது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளின் ஆலோசனை தேவையில்லை: அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 22 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் ஆலோசனை எமக்குத் தேவையில்லை, எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 1000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யுத்தம் காரணமாக 7 வீதமானவர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் வடபகுதியைச் சேர்தவர்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு வடபகுதிக்கு நாங்கள் வருகின்றபோது பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றோம்” என்றார்.

“தென்பகுதியில் 12 வீதமான தமிழ் மக்கள் - சிங்கள மக்களோடு சகோதரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இப்பகுதியில் நாங்கள் ஏன் சகோதரத்துடன் வாழமுடியாது? எங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றன. எங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஆலோசனை எமக்கு தேவையில். எங்கள் பிரச்சினையை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வோம்.

அத்துடன் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ - முதியோர்களின் நலன்களில் அதிக கவனம் செலுத்திவருகின்றார். இதற்காக மஹிந்த சிந்தனையின் கீழ் அடுத்த ஆண்டு தொடக்கம் நாட்டில் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வுதியக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதோடு நாடுபூராவும் 6 பேர் இத்திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

“பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை பாராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதால் முதியோர் இல்லங்களில் அவர்களைச் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் மாறவேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கான கொடுப்பனவு இனிவரும் காலங்களில் அதிகரிக்கப்படும். அவ்வாறு அதிகரிக்கும்போது இது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .