2025 ஜூன் 21, சனிக்கிழமை

பொலிஸ் தொடர்பான முறைப்பாடுகளை செய்வதற்கு புதன்கிழமை

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 22 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

பொலிஸ் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு புதன்கிழமைகளில் மக்கள் தினமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மக்கள் தினமாக கடைப்பிடிக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் எவ்வகையான முறைப்பாடுகளையும் பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா, யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகணேசன் ஆகியோர் இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஒருவார காலத்தில் யாழ். மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 76 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 52 பேரும், சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 12 பேரும், சூழல் மாசடைவை ஏற்படுத்திய 7 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேரும் கைது செய்யப்பட்டு இவர்களுக்கெதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .