2025 ஜூன் 21, சனிக்கிழமை

தனியார் காணியை இராணுவம் சுவீகரிக்க முடியாது; காணி உதவி ஆணையாளர் குருநாதன்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

'தனியார் காணிகளை இராணுவத்தினர் தங்களது தேவைக்கான சுவீகரிக்க முடியாது. அவ்வாறு சுவீகரித்தாளும் தேவைக்கு குறைந்தளவு காணிகளையே சுவீகரிக்க முடியும். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தனியார் காணி சுவீகரிப்புக்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 17இன் கீழ் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடரலாம்' என்று முன்னாள் வடக்கு கிழக்கு காணி உதவி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் - தமிழ்மிரருக்கு தெரிவித்துள்ளார்.

தனியார் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை.  அரச காணியை எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் இராணுவத்திற்கில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அரச காணியை சுவீகரிப்பது என்றாலும் இராணுவம் நேரடியாக அதனை எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக காணிசுவீகரிப்பு வழக்கு தொடர முடியும். ஆனால் அரசாங்கம் அதனை எடுத்து ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பாராதீனம் கட்டளையின் பிரகாரமே இராணுவமும் அரசும் காணியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் குறிபிட்டார்.

அத்துடன், அவ்வாறு அரச காணியை இராணுவம் பெற்றுக்கொள்ள நினைத்தால் பிரதேச செயலாளர் ஊடாக காணி ஆணையாளருக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். காணி ஆணையாளர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சிபாரிசின் படியே காணியை வழங்க வேண்டும்.

அவ்வாறான படிமுறைகளை மேற்கொள்ளாமல் அரச காணி எடுக்கப்பட்டால் இராணுவத்திற்கு எதிராக காணி அபரிப்பு வழக்கு தொடரலாம் என்று தெரிவித்தார்.

இந்த சுவீகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் இதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தனியாருக்கு காணி விற்பனை செய்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி 3 மில்லின் ரூபா அபராதம் செலுத்தினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .