2025 ஜூன் 21, சனிக்கிழமை

பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு விரைவில் இடம்பெறும்: யாழ். மேலதிக அரச அதிபர்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

2010ஆம் 2011ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பட்டம் பெற்றவர்களுக்கான பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் இன்று தெரிவித்தார்.

கடந்த 16ஆம் 17ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களின் அறிக்கைகள் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு அறிக்கைகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த காலங்களில் பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால்  தற்போது நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் கிடைக்கும்வரை நேர்முகத் தேர்வுக்கு தோற்றியவர்களை பொறுமையுடன் இருக்குமாறும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .