2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளையொட்டி யாழின் சில பகுதிகளில் மின்தடை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின்மார்க்கங்களை இணைக்கவேண்டியுள்ளதாலும் மின்விநியோகம் தடைப்படுமென யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, இணுவில், மருதனார்மடம், தாவடி, சுதுமலை, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், குருநகர், பாஷையூர், பிரதான வீதி, கொன்வன் பிரதேசம், பொலிகண்டி, குஞ்சர்கடையின் ஒருபகுதி, நவிண்டில், உடுப்பிட்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, கம்பர்மலை, தொண்டமனாறு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்படும்.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், யாழ் மாநகரசபைப்பகுதி, யாழ.; பட்டணப்பகுதி ஸ்ரான்லி வீதி, சுன்னாகம், இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாஷையூர், குருநகர், மந்திகை, சாரையடி, தம்பசிட்டிப் பிரதேசத்தின் ஒருபகுதி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்படும்.

எதிர்வரும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30மணிவரை அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், சுன்னாகம், மல்லாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய இடங்களிலும் எதிர்வரும் செவ்வாய்;க்கிழமை  ஊரெழு, கரந்தன் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படுமெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .