2025 ஜூன் 21, சனிக்கிழமை

'உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் விசாரணைக்கு சட்டமா அதிபரிடமிருந்து பதில் இல்லை'

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைகள் மேற்கொள்ள சட்டமா அதிபரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்று யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை. அதனால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்ட விடயத்தில் சட்டத்தரணி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதால், விசாரணைகள் மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .