2025 ஜூன் 21, சனிக்கிழமை

கல்லுண்டாய் வெளியில் கழிவுப்பொருட்களால் நோய் பரவும் அபாயம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                    (எஸ்.கே.பிரசாத்)
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள நாவாந்துறை மற்றும் கல்லுண்டாய் பகுதிகளில் பெருமளவு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் அவ்வழியால் பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாவாந்துறை தொடக்கம் கல்லுண்டாய் வெளிவரையான பகுதிகளில் பெருமளவு கழிவுப் பொருட்கள் மாநகரசபையினால் கொட்டப்பட்டு வருகின்றது. இதனாலேயே அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

தற்போது மழை காலம் தொடங்கியிருப்பதால் குறித்த கழிவுப் பொருட்களில் நீர் தேங்கி நின்று டெங்குநோய் பரவும் வாய்ப்பும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மாரிகாலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்தக் கழிவுப் பொருட்களை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ். மாநகரசபையின் சுகாதார குழுவின் தலைவர் விஜயகாந்திடம் கேட்டபோது மாநகரசபைக்கு அப்பகுதியைவிட்டால் வேறு இடம் இல்லை என்றும் குறித்த பகுதிகளில் பல்வேறு தரப்பினர் கழிவுப் பொருட்களை கொட்டிவருவதாகவும் இந்நிலையிலேயே அப்பகுதியில் மாநகரசபையும் குப்பைகள் கொட்டிவருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது கல்லுண்டாய் வெளியில் 13 லட்சம் ரூபா செலவில் அப்பகுதியில் கழிவு கொட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் குறித்த பகுதியில் கொட்டப்படும் கழிவுப் பொருட்களால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுவருவதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றமையால் இது தொடர்பாக கவனம் எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .