2025 ஜூன் 21, சனிக்கிழமை

இராணுவத்தினரின் உதவும் மனோபாவத்தை யாழ். மக்கள் நன்கு அறிவர்: ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

'அதிகளவான இராணுவத்தினர் யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ளனர் என்று புலம்பெயர் தமிழர்களும், சில கட்சியினரும் குரலெழுப்பி வருகின்ற போதிலும், இராணுவத்தினரின் உதவும் மனோபாவம் தொடர்பில் யாழ். மக்கள் நன்கு அறிந்துள்ளனர்' என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

'பொதுமக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், பெரும்பாலான நேரத்தை கொழும்பில் வாழ்வதிலேயே செலவளிக்கின்றனர். ஆனால், இராணுவம் எந்நேரமும் யாழ். மக்களுடனேயே இருக்கின்றது. அதனால், இராணுவம் தமக்கு எவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றது என்பதை அம்மக்கள் அறிவர்' என்றும் அவர் குறிப்பிட்டார். 

அச்சுவேலி பகுதியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமானளவில் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராணுவத்தினர் தங்கியிருந்த தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்களும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .