2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீதி அகலிப்பு பணிக்காக யாழின் சில பகுதிகளில் மின்தடை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின்மார்க்கங்களை இணைக்கவேண்டியுள்ளதாலும் ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படுமென யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை சாவகச்சேரி பிரதேசம், கைதடி, மறவன்புலோ, நாவற்குழி, மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், ஆனைக்கோட்டை, நவாலி, கட்டுடை, இணுவில், தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், சுன்னாகம், மல்லாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நேரத்தில் வேலைகள் நிறைவுபெற்றவுடன் மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .