2025 ஜூன் 21, சனிக்கிழமை

கலைப்பட்டதாரிகள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு உள்வாங்கப்படமாட்டர்கள்: எம்.பி முருகேசு சந்திரகு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

'கலைப்பட்டதாரிகள் இனி வரும் காலங்களில் ஆசிரியர் தொழிலுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள்.  இலங்கையில் போதிய அளவு ஆசிரியர்கள் சேவையில் இருக்கின்றனர்' என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

தேசிய தொழில் வங்கியின் புதியக் கிளை யாழ்.பலாலி வீதி இலுப்பயடிச் சந்தியில் இன்று புதன்கிழமை திறந்த வைக்கப்பட்டது

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று தொழிலுக்கான போட்டி அதிகரித்துள்ளது. தொழில்வாய்ப்புக்களை பெறவேண்டும் என்பதற்காக போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் அரச வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதையே விரும்புகின்றார்கள்.

அரச சேவையில் இருந்த வெற்றிடங்கள் யாவும் நிரப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரச வேலை வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவுள்ளது. பல்கலைக்கழகத்தில் கல்விகற்று பட்டம் பெற்றவர்களை விட பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாதவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

எமது பிரதேசத்தில் தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாத காரணத்தினால் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களே வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்ற போதும் எமது மக்கள் அவர்களின் கீழ் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவுபெற்றவுடன் எமது மக்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உதவிச் செயலாளர் திருமதி மதியழகன், யாழ்.வர்தக சம்மேளனத் தலைவர் பூரணச் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொழில்வாய்ப்பு இல்லாதவர்களை இனங்கண்டு அவர்களின் ஆளுமையினை விருத்தி செய்து உளமேம்பாட்டின் ஊடாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த தொழில் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .