2025 ஜூன் 21, சனிக்கிழமை

இருபாலை விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)
யாழ்ப்பாணம், இருபாலைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

பருத்தித்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார்  பஸ்ஸொன்றை  மற்றுமொரு  மினிபஸ் முந்திச் செல்ல முற்பட்டபோது, அருகிலிருந்து கட்டுடன் மினி பஸ் மோதி விபத்திற்குள்ளானதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரஇணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .