2025 ஜூன் 21, சனிக்கிழமை

'புலிகளை அழித்துவிட்டதாக கூறும் அரசு எதற்கு பாதுகாப்பு வலயங்களை நிறுவுகிறது?: சுரேஸ்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் பலாலி பகுதியில் 500 மீற்றர் வரையான பகுதியே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு அப்பால் பொதுமக்களே வசித்து வந்தனர்.

அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு வலையங்களை பெருப்பிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது என்று யாழ். ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநரால் மேற்கண்டவாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே, சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

'கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பலமாக இருந்தது உண்மைதான் அப்போது ஆட்லறி அடிப்பதற்கும் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இப்போது ஆட்லறிகளும் இல்லை அடிப்பதற்கு ஆட்களும் இல்லாத நிலையில் தேசிய பாதுகாப்பு என்பது எதற்காக? என்று சுரேஸ் எம்.பி தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
 
மக்கள் இல்லாத வலிகாமம் வடக்குப் பகுதியில் தேசிய பாதுகாப்பு வலயம் என்று அடையாளப்படுத்தி அரசாங்கம் பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. அதனால் எமது மக்கள் வீதிகளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன்  பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலை காரணமாக மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இன்னுமொரு பிரச்சினை உருவாகும்' என்றும் சுரேஸ் எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy M Monday, 08 October 2012 11:50 PM

    ஐயா சுரேஷ் அவர்களே, நீங்கள் புலிகளை அளிக்கப்போய் முடியாததை அரசாங்கம் செய்திருக்கு. பேசாமல் கொளுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு சும்மா இருங்கோ...

    Reply : 0       0

    jenosha Tuesday, 09 October 2012 05:06 AM

    அம்மா சுமதி..!!! சம்பளத்தை எடுத்துக்கொண்டு சும்மா இருக்க முடியது... இது தமிழ் மக்கள் பிரச்சினை. உங்க வீட்டில அத்துமீறி யாராவது வந்தால் நீங்க சும்மா இருப்பிங்களா?

    Reply : 0       0

    jenosha Tuesday, 09 October 2012 05:07 AM

    உங்க வீட்டில அத்து மீறி யாராவது வந்தால் நீங்க சும்மா இருப்பிங்களா?

    Reply : 0       0

    குமார் Tuesday, 09 October 2012 07:11 AM

    அவர்கள் சும்மா இருப்பதற்காக நாடாளுமன்றம் அனுப்பப்படவில்லை. பெரும்பான்மை தமிழர்களின் கருத்தை பிரதிபலிக்கிறார்கள். சில அடிவருடிகள் இதை புரிந்துகொண்டால் நல்லது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .